திருநவேலி பாஷைய ரெண்டரை வருசம் ரிசர்ச் செஞ்சேன் பாத்துக்கோ!- நெல்லைத் தமிழால் உயர்ந்த நெல்லை சிவா


“அடுத்த சீனுக்கு நடிக்க கூப்புடுதாக பாத்துக்கோ… மேக்கப் போட்டுகிட்டே பேசுவமா?” என மண்வாசனை படர ஆரம்பிக்கிறார் நெல்லை சிவா. தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி, நகைச்சுவை பட்டாசுகளை வெடிக்க வைப்பவர். நாகர்கோவிலில் ஷூட்டிங் ஒன்றுக்கு வந்தவரை காமதேனுவுக்காகச் சந்தித்தேன்.

திரைத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

நெல்லை மாவட்டம் பணக்குடி இருக்குல்லா... அது பக்கத்துல வேப்பிளாங்குளம்தான் என் சொந்த ஊரு. நான்லாம் ஸ்கூலு படிக்கும்போதே வெறிபிடிச்ச சிவாஜி ரசிகனாக்கும். அவரு வசனத்தைக் கேட்டுத்தான், சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டேன். ஆனா, கிராமத்துல பிறந்தவன் பாத்தியளா, அதனால வெளிய சொல்லதுக்கும் வெட்கம்! ஸ்கூலுல பேச்சுப்போட்டியிலும் நான்தான் ஃபர்ஸ்ட். அண்ணாவைப் பத்தி பேசுனேன். ‘அழகிய செந்தாமரை குளத்திலேன்னு ஆரம்பிச்சு’ அண்ணாவைப் பத்தி நீளமா வசனம் பேசுவேன். அப்போ இருந்தே வசனம் பேசதுன்னா இஷ்டம். நான் வசதியான குடும்பத்துல பிறந்தவன். அதனால வீட்ல கெடந்து நல்லா சாப்பிட வேண்டியது, ஊரு கோயில்ல படுத்துக்கெடந்து காத்து வாங்கது, தூங்கது, சீட்டு விளையாடதை வேடிக்கை பாக்கது, இதுக்கு இடையில் சிவாஜி வசனம் பேசது இதுதான் அப்பல்லாம் பொழுதுபோக்கு. வசனத்தை ஊருக்குள்ள எல்லாரும் கேட்டுப் பாராட்டுனதுலதான் நான் சென்னைக்குப் புறப்பட்டேன்.

முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

x