இன்னொரு பெண் இயக்குநர் உருவாகிறார்..!


‘மணிகர்ணிகா- தி குயின் ஆஃப் ஜான்சி’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, ‘என்.டி.ஆர்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார் க்ரிஷ். தற்போது ‘மணிகர்ணிகா’ படத்தை ஒட்டுமொத்தக் குழுவினரும் பார்த்து, சில காட்சிகளைச் சேர்க்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ‘என்.டி.ஆர்’ படத்தில் க்ரிஷ் மும்முரமாக இருப்பதால், நாயகி கங்கனா ராணாவத் அக்காட்சிகளை இயக்கிச் சேர்க்க முடிவு செய்துவிட்டாராம்.

இன்னொரு பெண் இயக்குநர் உருவாகிறார்..!

ஏற்கெனவே ட்ரெய்லர் பரபரப்பாகிவிட்ட சூழலில், தற்போதைய ட்ரெண்ட் படி, ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது யுடர்ன் (தமிழ்) படக்குழு. அந்தப் பாடலுக்காக நாயகி சமந்தா, இசையமைப்பாளர் அனிருத்துடன் செம ஆட்டம் போடப் போகிறாராம்.
தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

`என்னமோ நடக்குது', ‘அச்சமின்றி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜபாண்டி. அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமியும், ரெஜினாவும் நடிக்கிறார்கள். ஒரே அரங்கில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகள் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில்
நடைபெற்று வருகிறது.
அரவிந்த்சாமி காட்டுல அடைமழை போல...

x