வெள்ளித் திரையும் என்னை அங்கீகரிக்கும்- அடுத்தடுத்து ரகளை கிளப்பும் ரம்யா!


விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் சாந்த ‘சவும்யா’வாக தடம்பதித்து வரும் ரம்யா, தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘அழகு’, ‘ரோஜா’ தொடர்களிலும் அடுத்தடுத்து அரிதாரம் பூசிவருகிறார். ஒரு மாலைப் பொழுதில் காமதேனுக்காக அவரிடம் சின்னதாய்
கதைத்ததிலிருந்து...

ஒரே சமயத்தில் 3 தொடர்கள். இதற்கு முன்பு ரம்யாவை இவ்வளவு பரபரப்பாக பார்த்ததில்லையே?

இதுக்கு முந்தி, இப்படி மூன்று விதமான கதாபாத்திரங்கள் வர்ற மூன்று சீரியல்கள் ஒண்ணா அமையலைன்னுதான் சொல்லணும். இப்போ அதுவா வந்திருக்கு... விடலாமா? எப்பவுமே நாம தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அதுக்கு முந்தி வந்த கதையின் கதாபாத்திரத்தின் சாயல் இருக்கேன்னு யாரும் சொல்லிடக்கூடாது. அந்தச் சாயல் எதுவும் இல்லாம தனித் தனி டிராக்கா பக்காவா செட் ஆகியிருக்கு. அதான், ஓட ஆரம்பிச்சுட்டேன்.

‘அழகு’ சீரியலில் சீனியர் நடிகை ரேவதி இருக்காங்க. அவங்களப் பத்தி உங்க ஒப்பீனியன்..?

x