முதல்ல உடம்பைத் தேத்துங்க அம்மணி!


‘சண்டக்கோழி 2’ படத்தில் விஷாலுக்கு நாயகியாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ் உற்சாகத்தில் இருக்கிறார். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரமாக அதைப் படைத்திருக்கிறாராம் லிங்குசாமி. காமெடி, காதல், எமோஷன் என்று கலந்துகட்டி அடிக்கும் இந்தக் கதாபாத்திரம், தன் திரைப்பயணத்துக்கு அடுத்தகட்ட மைலேஜைக் கொடுக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனவேதான், கதையைக் கேட்ட உடனேயே, “எத்தனை நாட்கள் தேதி வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்” என்று கூறிவிட்டாராம் கீர்த்தி.

அதெல்லாம் சரி, வரலட்சுமியை சேலைகட்டுன வில்லியாக்கிட்டீங்களே பாஸ்!

‘கோல்ட்’ படத்துக்கான சந்திப்பில் அக் ஷய்குமாரிடம் ‘2.0’ படம் குறித்து கேட்டார்கள். அதற்கு “நான் மட்டுமல்ல... எனது ரசிகர்களும் அப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். என் ரசிகர் ஒருவர், ‘உண்மையிலேயே அந்தப் படத்தில் நடித்திருக்கீங்களா, இல்லையா?’ என்று கூட கேட்டார். அவ்வளவு காலம் ஆகிவிட்டது. விரைவில் அப்படம் வெளியாகும் என நம்புகிறேன். நானும் படத்தின் ஒரு பிரேமைக்கூட முழுமையாக பார்க்கவில்லை. டப்பிங் போது மட்டும் சில காட்சிகளைப் பார்த்தேன். அப்படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்று தனது சோகம் கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அக் ஷய்குமார்.

அய்யோ பாவம் சார் நீங்க!

x