ஏய்... பாடல் ஒன்று..!- பேசும் ப்ரியா பிரகாஷ் வாரியர்


மசாலா படங்களில் ஒரே பாடலில் ஓஹோவென்று உயர்வார்களே, அதை நிஜத்தில் செய்து காட்டியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடல் மூலம் ஒரே நாளில் உலக பிரபலமானார் ப்ரியா. இன்னும் ஒரு படம்கூட வெளிவரவில்லை, ஆனால், சினிமா ரசிகர்களுக்கு அப்பட்டமாய் அறிமுகமாகிவிட்டது பொண்ணு. கேரளத்து அடைமழை போல, வரிசையாய் வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் ‘காமதேனு’வுக்காக அவர் அளித்த மினி பேட்டி இது.

ஒரே வீடியோவில் உலகப் புகழ்பெற்றுவிட்டீர்கள். எதிர்பாராத இந்தப் புகழை எப்படிக் கையாண்டீர்கள்?

பாடல் வெளியான சில மணி நேரத்தில், பத்துலட்சம் பேர் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்கள். மொழி எல்லைகளைக் கடந்தும் அது வைரலாகிவிட்டது. முதலில், என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. போகப் போக அனைவரும் நிஜமாகத்தான் புகழ்கிறார்கள் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

பல பிரபலங்கள் உங்கள் வீடியோவை சமூக வலை தளங்களில் பகிர்ந்தார்கள். உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார்?

x