மீனாட்சியா வாழ்ந்ததுக்கு கிடைத்த அங்கீகாரம் இது!- நெகிழ்கிறார் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா


“டி.வி.சீரியல்ல நடிக்கிறவங்கட்ட, ‘உங்களோட இன்ஸ்பிரேஷன் ரோல் எது?’ன்னு கேட்டீங்கன்னா, பெரும்பாலானவங்க, ‘அருந்ததி மாதிரி, இல்லைன்னா நீலாம்பரி மாதிரி ஒரு ரோல்’னு சொல்வாங்க. எனக்கும் அப்படி மெஜஸ்டிக்கா ஒரு ரோல் பண்ணணும்னு ஆசை உண்டு. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலை முடிச்சுட்டு அடுத்தாப்புல அப்படி ஒரு ரோல் எடுப்போம்னு பிளான்ல இருந்தேன். ஆனா, என்ன நடந்துச்சுன்னா... அந்த மாதிரி ஒரு டிராக் இப்போ இந்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்லயே அமைஞ்சுடுச்சு. நானே எதிர்பார்க்கல. இதை பெரிய விஷயமா எடுத்துக்கத்தானே வேணும்’’ என்கிறார் ரச்சிதா.

விஜய் டி.வி-யில் தற்போது நகர்ந்துவரும் ‘சரவணன் மீனாட்சி’ பார்ட் 3 வெர்ஷனில் புனர் ஜென்மம் மாதிரியான பின்னணியில் அசத்திவரும் ரச்சிதாவுடன் இன்னும் கொஞ்சம் பேசினேன்.

ரொமான்ஸ், அழுகாச்சி பெண் என நடித்துவந்த மீனாட்சி கேரக்டரை இப்படி மாற்றிவிட்டார்களே?

ஆமாம். எனக்கும் அந்த ஆச்சரியம் இருக்கத்தான் செய்யுது. வித்தியாசமான லுக் கொடுத்துட்டாங்க. வாய்ப்பு அமையும்போது அதைச் சரியா பயன்படுத்திக்கணும் இல்லையா. அதைத்தான் இப்போ செய்யுறேன்.

x