செல்வாவை கரம்பிடிக்கும் சிவரஞ்சனி- இது சேனலில் மலர்ந்த காதல்!


‘‘எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட திக் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. அம்மாவும் ரொம்ப ஜாலி டைப். வீட்டுக்கு வர்றவங்க எல்லாரையும் அம்மா அப்படி கவனிப்பாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட அப்பாவை இழந்தப்போ, செல்வாதான் கூடவே இருந்து எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிட்டான். ஒரு வேளை அதுவும்கூட இவன் மீது எனக்குக் காதல் துளிர்க்க ஒரு காரணமா இருந்திருக்கலாம்’’ என்கிறார், தொகுப்பாளினி சிவரஞ்சனி.

புதிய தலைமுறை சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி

யும் செய்தி வாசிப்பாளருமான சிவரஞ்சனிக்கும் அதே சேனலின் என்டர்டெய்ன்மென்ட் பிரிவுச் செய்தியாளரான செல்வாவுக்கும் ஜூன் 17 -ல், கெட்டிமேளம்!  நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் அவசரத்தில் இருந்த காதல் ஜோடியை மடக்கி, காதல் கனிந்த கதையைக் கேட்டேன்.

செல்வாவை முந்திக்கொண்டு பேசிய சிவரஞ்சனி “செல்வா எந்த விஷயத்திலும் தனித்துவமா இருக்கணும்னு விரும்புறவன். யாருடைய கனவுகளுக்கும் குறுக்கே நிற்கக்கூடாதுன்னும் நினைப்பான். இவனோட இந்தக் குணம்தான் என்னைக் கவர்ந்தது’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே செல்வா குறுக்கிட்டு “அதெல் லாம் ஓ.கே, நம்ம காதலுக்கு உங்க அம்மாக்கிட்ட எப்படி சம்மதம் வாங்கினேன்னு சொல்லு...’’ என்கிறார்.

x