வில்லியாக நடிக்கும்போது பயந்தேன்!- ஷிவதா நாயர்


நாக்கில் தமிழ் நர்த்தனமாடுகிறது ஷிவதா நாயருக்கு. ‘அதே கண்கள்’ படத்தில் வில்லியாக மிரட்டியவர், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன்  ‘இறவாக்காலம்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பேட்டிக்காகத் தொடர்புகொண்டபோது, “பேட்டியா? பரீட்சைக்குப் படிச்சுட்டு இருக்கேனே...” என்று சங்கடப்பட்டார். அப்புறமென்ன அது பற்றித்தான் முதல் கேள்வியே...

என்ன படிச்சுக்கிட்டு இருக்கீங்க... ப்ளஸ் டூ உடனடித் தேர்வுக்கா..?

இந்தக் குறும்புதானே வேணாங்கிறது. மோகினியாட்டம், குச்சிப்பிடியைத் தொடர்ந்து, இப்ப தீவிரமா பரதத்துல பிஜி படிச்சிக்கிட்டு இருக்கேன். சின்ன வயசுலருந்தே பரதநாட்டியம் கத்துக்கட ஆரம்பிச்சிட்டாலும், சினிமாவுக்குள்ள வந்ததால லாங் பிரேக் விழுந்துடுச்சு. ஷுட்டிங் இடையே நேரம் ஒதுக்கிப் போக முடியல. இப்ப கொஞ்சம் கேப் கிடைச்சுது. உடனே, ‘பத்மவிபூஷண்’ விருது பெற்ற தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன் இணையரிடம் சேர்ந்துட்டேன். அவங்ககிட்ட படிக்கிறதுக்குக் கொடுத்து வெச்சுருக்கணும். வெறுமனே அந்தக் கலையை மட்டும் கத்துக்கிட்டா போதாது, அதோட சாஸ்திரத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப் பட்டேன். அதனால்தான், பரதநாட்டியத்தில் எம்.ஏ. தமிழ் வழியில் படிச்சுட்டு இருக்கேன்.

 உங்களது தமிழார்வம்... எப்படிங்க?

x