சினி பிட்ஸ்


ஹன்சிகா பாதி, ‘தாமிரபரணி’ பானு மீதி கலந்து செய்த கலவைபோல் இருக்கும் அதுல்யா ரவி, ‘நாடோடிகள் 2’ முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார். மீண்டும் தனது முதல் பட இயக்குநரான சிவராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்தடுத்து பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து அழைப்பு வருவதால், சந்தோஷத்தில் இருக்கிறார் அதுல்யா.

 இந்தப் படத்துலயும் உங்க காதலுக்கு மரியாதை செய்வாரா சசிகுமார்?

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் நாயகனாக பாலையா என்ற பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் ரோலில் நடிக்க வித்யா பாலனை அணுகினார் இயக்குநர் தேஜா. மலையாளப் படமான ‘உருமி’யில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததைத் தவிர, தென்னிந்தியப் படங்கள் எதிலும் நடித்ததில்லை வித்யா பாலன்.

சில்க் வேடத்துல நடிச்சப்பவே எங்கவூருப் பொண்ணாகிட்டீங்க!

x