தமிழ் ரசிகர்களை விடப்போவதில்லை - ரீத்து வர்மா


முழுமையாக ஒரு தமிழ்ப் படத்தில்கூட நடிக்கவில்லை. சில குறும்படங்களிலும் ‘பெள்ளி சூப்புலு’ உள்ளிட்ட தெலுகு படங்களிலும் நடித்துள்ள ரீத்து வர்மா, அதற்குள் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', துல்கர் சல்மானுடன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ரீத்து, ஷூட்டிங் இடைவேளையில் ஃபேஸ்புக் சாட்டில் கொடுத்த பளிச் பதில்கள்தான் இவை. 

‘பெள்ளி சூப்புலு’ வெளியாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. அதற்குப் பிறகு, திரையில் அதிகம் பார்க்க முடிவதில்லையே?

எனக்கு எண்ணிக்கையைவிட தரம் முக்கியம். ‘பெள்ளி சூப்புலு'வுக்குப் பிறகு அதேபோன்ற பல வாய்ப்புகள் வந்தன. பொறியியல் மாணவியான நான் நடிக்க வந்தது விபத்துதான் என்றாலும், நடிப்பில் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. கொடுக்கப்படும் கதாபாத்திரம் முதலில் என்னைக் கவர வேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானே?

x