பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.01, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
ரிஷபம்: பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும்.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.
துலாம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும்.
விருச்சிகம்: பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.
தனுசு: பிரபலங்களை சந்திப்பீர்கள்.
மகரம்: கௌரவ பதவி தேடி வரும்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மீனம்: திட்டமிட்டவேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)