பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 10, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.
ரிஷபம்: மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள்.
மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
கடகம்: பல காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
சிம்மம்: பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு உண்டாகும்.
கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
துலாம்: வெகுநாளாக மனதை வாட்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: உங்கள் எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
மகரம்: பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
கும்பம்: திடீர் பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)