மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ நவ.30, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (நவ.30, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிபழகவும்.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

மிதுனம்: சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர்.

கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு உண்டு. சிலர் புது வாகனம் வாங்குவீர்.

சிம்மம்: சகோதர வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மன மகிழ்ச்சியுண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவர்.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பான செலவு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர்.

மீனம்: மனதில் பட்டதை பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x