மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.30, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 30, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தடைகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்: புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களை கட்டும்.

சிம்மம்: வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும்.

கன்னி: விலகி சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வருவார்கள்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறைகூறாதீர்கள்.

மகரம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

மீனம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x