துருக்கி ஏரோஸ்பேஸில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 5 பேர் பலி!

By KU BUREAU

துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

தங்கள் ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை துருக்கி இந்த நிறுவனத்தில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் குர்திஷ்தான் வொர்க்கர்ஸ் பார்ட்டியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா இரங்கல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE