ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

By KU BUREAU

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி மறைந்தார். இவரது மறை வுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் சிங்கப்பூரின் உண்மையான நண்பர் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளம் மூலமாக பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: ரத்தன் டாடா மறைவுக்கு நானும், இஸ்ரேல் மக்களும் துக்கம் அனுசரிக் கிறோம். இந்தியாவின் பெருமை மிகு புதல்வராக திகழ்ந்த ரத்தன் டாடா, இந்தியா-இஸ்ரேல் நட்புறவின் சாம்பியனாக திகழ்ந்தார். ரத்தன் டாடா குடும்பத்தினரிடம் எனது இரங்கல்களை தெரிவிக்கவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE