தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்... ஆட்டம் கண்ட வீடுகளால் வீதிக்கு ஓடிய மக்கள்!

By கவிதா குமார்

தஜிகிஸ்தானில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு வீடுகள் இடிந்து பலர் வீடுகளை இழந்து வருகின்றனர். அத்துடன் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று காலை 11.35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. கோரக் அருகே 120 கிலோ மீட்டர் ஆழந்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் லேசாக அதிர்ந்ததால், மக்கள், வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE