ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

By காமதேனு

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பாக 19 வயது மாணவர் கைது செய்ப்பட்டுள்ளார்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷினி ஏகன்யாகே(35) தனது குழந்தைகள் மற்றும் கணவர், 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பர்ஹெவன் பகுதியில் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தர்ஷினி, அவரது நண்பருடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது வீட்டுக்குள் புகுந்த இளைஞர், தர்ஷினி மற்றும் அவரது நண்பர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரிடமிருந்து தப்பியோட நினைத்தவர்களை ஓட ஓட விரட்டி அந்த இளைஞர் கத்தியால் குத்தினார்.

தர்ஷினி, கணவர் மற்றும் குழந்தைகள்

இதில் தர்ஷினி ஏகன்யாகே, அவரது மகன் இனுகா விக்ரமசிங்கே(7), மகள்கள் அஸ்வினி(4), ரினியானா(2) மற்றும் இரண்டரை மாதங்களான கெல்லி மற்றும் தர்ஷினியின் நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்த போலீஸார், விரைந்து வந்து கத்திக்குத்தில் காயமடைந்த தர்ஷினியின் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், இலங்கையைச் சேர்ந்த ஃபைப்ரியோ டி சொய்சா(19) என்ற மாணவனை கைது செய்தனர். இவர் தர்ஷினியின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக அவர் இத்தனை கொலைகளைச் செய்தார் என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE