தகாத உறவை அம்பலப்படுத்திய ட்ரோன் கேமரா: மனைவியை விவாகரத்து செய்ய கணவன் முடிவு

By KU BUREAU


வேறு ஆணுடன் தகாத உறவில் இருந்த மனைவியின் செயல்பாடுகளை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்த கணவர், அதை ஆதாரமாக வைத்து விவாகரத்து பெற உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக உலகம் முழுவதும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளின் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இப்படியான தவறான உறவுகள் குடும்பத்தின் மீது கொண்ட நம்பிக்கையை உடைப்பதோடு, அழகிய உறவுகளையும் சிதைத்து விடுகிறது. தற்போது இதுபோன்ற ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனைவியின் ஒழுக்கக்கேடான உறவால் சோர்வடைந்த கணவன், ட்ரோன் கேமரா மூலம் அவள் செய்த மோசடியை கண்டுபிடித்து, அந்த ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜிங்(33) என்பவர் கடந்த ஒரு வருடமாக தனது மனைவியின் நடத்தையால் குழப்பமடைந்தார். இதன் காரணமாக தனது மனைவியின் செயல்பாடுகளை அவர் கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போது தனது மனைவிக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதை ஜிங் கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ட்ரோன் கேமராவையும் பயன்படுத்த ஆரம்பித்தார்.

இந்த நிலையில், காரில் அவரது மனைவி வேறொரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் அதை விட்டு வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சியை ட்ரோன் கேமராவில் பார்த்த ஜிங் அதிர்ச்சி அடைந்தார். தனது முதலாளியுடன் மனைவி ஒழுக்கக்கேடான உறவில் இருந்து கொண்டு ஏமாற்றுவதைக் கண்டுபிடித்த ஜிங், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE