ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீன்: தமிழக மீனவர்களை பதறவைத்த இலங்கை நீதிபதி

By காமதேனு

தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால் ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 24-ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 7-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சிறைக் காவல் முடிந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களை மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் ஒரு மீனவருக்கு தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறினார். நீதிபதியின் இந்த உத்தரவு தமிழக மீனவர்களை அதிரவைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE