8 வயது மகன் மீது கொலைவெறித் தாக்குதல் - கொடூரத் தாயை கைது செய்தது போலீஸ்

By KU BUREAU

ஹரித்வார்: 8 வயது மகன் மீது ஏறி தாய் அமர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம் ரூர்க்கி பகுதியில் உள்ள ஜப்ரேடா கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 8 வயது மகனின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் மீண்டும் வாயிலும், கன்னத்திலும் குத்துவதுடன், கடித்து வைக்கிறார்.

அத்துடன் அந்த சிறுவனின் தலையைப் பிடித்து தரையில் மோத வைத்ததால் அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனைத் தாக்கிய அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணை கைது செய்தனர். எதற்காக அவர் தனது மகனை கொடூரமாக தாக்கினார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE