சென்னை: நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான் என தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்
நேற்று தலைவராக பதவியேற்ற பின்னர் அரசியல் ரீதியாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‘நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது.
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே. இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது. இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்.
» ‘2026ல் துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை’ - காங்கிரஸின் போஸ்டர் யுத்தத்தால் சென்னையில் பரபரப்பு!
» இளைஞரின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை; சிவகங்கை இளையான்குடி அருகே பயங்கரம்
பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்