எழும்பர் ரயில் நிலைய தொலைத்தொடர்பு அலுவலகத்தில் தீ விபத்து: பல லட்​சம் ரூபாய் மதிப்​பிலான கேபிள்கள் எரிந்து சேதம்

By KU BUREAU

சென்னை: எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் உள்ள தொலைத்​தொடர்பு அலு​வல​கத்​தில் நேற்று பிற்​பகலில் திடீர் தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் பல லட்​சம் ரூபாய் மதிப்​பிலான கேபிள்​கள் எரிந்து நாச​மாகின. தமிழகத்​தின் முக்​கிய​மான ரயில் நிலை​யங்​களில் ஒன்​றான எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் இருந்து தின​மும் 40-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதுத​விர, இந்த ரயில் நிலை​யத்​தின் வழி​யாக, 200-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் செல்​கின்​றன. இதனால், காலை முதல் நள்​ளிரவு வரை எப்​போதும், பரபரப்​பாக இருக்​கும். இந்​நிலை​யில் இந்த நிலை​யத்​தில் உள்ள தொலைத்​தொடர்பு அலு​வல​கத்​தில் நேற்று பிற்​பகலில் திடீர் தீ விபத்து ஏற்​பட்​டது.

காந்தி இர்​வின் சாலையை ஒட்டி அமைந்​துள்ள கட்​டிடத்​தில் தொலைத்​தொடர்பு அலு​வல​கம் உள்​ளது. இங்கு முதல் தளத்​தில் நேற்று பிற்​பகல் 2.40 மணிக்கு திடீரென தீ பிடித்​தது. இந்த அலு​வல​கத்​தின் பின்​பகு​தி​யில் உள்ள உயர்​மட்ட மின் கம்பி மூல​மாக, தீ விபத்து ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. தீ மளமளவென பரவத் தொடங்​கியதை அடுத்​து, ஊழியர்​கள் அங்​கிருந்து வெளி​யேறினர். பின்​னர் பிர​தான பகு​திக்கு விநி​யோகிக்​கப்​படும் மின் இணைப்​பு​களை துண்​டித்​தனர். இதுத​விர, டிக்​கெட் கவுன்ட்​டர்​கள், சிக்​னல் தொழில்​நுட்​பம், அலு​வலக போன் இணைப்பு உள்​ளிட்​ட​வற்​றின் இயக்​க​மும் நிறுத்தி வைக்​கப்​பட்​டன.

தகவலின்​பேரில், எழும்​பூர் தீயணைப்பு படை வீரர்​கள் விரைந்து வந்​து, தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். பிற்​பகல் 3.30 மணிக்​குள் தீயை முழு​மை​யாக அணைத்​தனர். இந்த தீ விபத்​தில், பல லட்​சம் ரூபாய் மதிப்​பிலான தொலைத்​தொடர்பு கேபிள்​கள் எரிந்து நாச​மாகின. மின் கசிவு காரண​மாக, தீவிபத்து ஏற்​பட்​ட​தா? அல்​லது வேறு காரண​மா? என்​பது குறித்து ரயில்வே பாது​காப்பு படை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர். இந்த சம்​பவத்​தால், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் சிறிது நேரம்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE