முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதி​மன்​றம்

By KU BUREAU

சென்னை: முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது மத்​திய சென்னை தொகுதி திமுக எம்​பி​யான தயாநி​தி​மாறன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியை முறை​யாக செல​விட​வில்லை என அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி சென்​னை​யில் நடை​பெற்ற தேர்​தல் பிர​ச்சார பொதுக்​ கூட்​டத்​தில் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

இதற்கு மறுப்பு தெரி​வித்த தயாநிதி மாறன், முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி்க்கு எதி​ராக அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு சென்னை எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், வழக்கு விசா​ரணைக்கு தடை விதிக்​கக் கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பழனி​சாமி மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், தயாநி​தி​மாறன் தொகுதி நிதியை முறை​யாக செல​விட​வில்லை என நாளிதழ்​களில் வந்த செய்​தி​யின் அடிப்​படை​யிலேயே தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது பேசி​ய​தாக​வும், இது அவதூறு ஆகாது என்​ப​தால் தனக்கு எதி​ரான வழக்கை ரத்து செய்ய வேண்​டும் எனவும் அவர் கோரி​யிருந்​தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது பழனி​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜான் சத்​யன், “தி​முக எம்பி தயாநி​தி​ மாறனுக்கு எதி​ராக அரசு இணை​யதளங்​களில் உள்ள தரவு​களின் அடிப்​படை​யிலும், நாளிதழ்​களில் வந்த செய்​தி​யின் அடிப்​படை​யிலுமே மனு​தா​ரர் அவ்​வாறு பேசி​னார். மற்​றபடி அவர் வேறு எந்த அவதூறு கருத்​துகளை​யும் தெரிவிக்​க​வில்​லை” என்​றார்.

வருத்தம் தெரிவித்த நாளிதழ்: பதி​லுக்கு தயாநிதி மாறன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், “தயாநிதி மாறன் தொடர்​பான அந்த செய்​திக்கு சம்​பந்​தப்​பட்ட நாளிதழ் வருத்​தம் தெரி​வித்​து​விட்ட நிலை​யில், தேர்​தல் நேரத்​தில் மனு​தா​ரர் வேண்​டுமென்றே தயாநிதி மாறன் மீது குற்​றம்​சாட்டி பேசி​யது அவதூறானது” என வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்​கில் தயாநிதி மாறன் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை வரும் ஏப்​.4-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார். அது​வரை பழனி​சாமி்க்கு எதி​ரான வழக்​கு வி​சா​ரணைக்​கு இடைக்​காலத்​ தடை வி​தித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE