கூடலூர் பென்னை காப்புக்காட்டில் ஆண் புலி உயிரிழப்பு; அடுத்தடுத்து 2 புலிகள் இறப்பால் அதிர்ச்சி

By ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: பென்னை காப்புக்காடு பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை வனச்சரகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்து, மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெலாக்கோட்டை பகுதியில் இன்று (மார்ச் 6) காலை மேலும் ஒரு ஆண் புலி இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். பாலினம், வயது, இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெலக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE