'இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு' - இளையராஜாவுக்கு அண்ணாமலை, எல்.முருகன் நேரில் வாழ்த்து!

By KU BUREAU

சென்னை: லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி அய்யா இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE