தென்காசி சேர்ந்தமரம் அருகே புதரில் சிசு சடலம் மீட்பு: வீசியவர்கள் குறித்து விசாரணை

By KU BUREAU

தென்காசி: சேர்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடானூருக்கு வடக்கு பகுதியில் சித்திரபுத்திர ஊருணி உள்ளது. இதன் அருகில் உள்ள புதரில் பிறந்து சில நாட்களே ஆன சிசு சடலம் கிடந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர்.

இது குறித்து, சேர்ந்தமரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, சிசு சடலத்தை புதரில் வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE