‘இதுதான் கடைசி வீடியோ, இனிமேல் எந்த புகாரும், போராட்டமும் இல்லை’ - விஜயலட்சுமி அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: ‘இனிமேல் இது தொடர்பாக எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். இதை இத்தோடு விட்டுவிடுங்கள். இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. எனவே இதுதான் எனது கடைசி வீடியோ’ என சீமான் விவகாரம் குறித்து விஜயலட்சுமி பேசியுள்ளார்

இதுகுறித்து விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி மக்களிடம் பேச விரும்புகிறேன். நேற்றைய தீர்ப்பின்படி செட்டில்மெண்ட் செய்ய சொல்லியுள்ளார்கள். இதுபற்றி ‘ விஜயலட்சுமிக்கு சீமான் ரூ.10 கோடி கொடுத்தார்’ என எழுத ஆரம்பித்து விடுவார்கள். இதனால் அபாண்டமான பழி சுமத்த ஆரம்பித்து விடுவார்கள். உயர்நீதிமன்றத்தின் எனது வழக்கை ரத்து செய்ய சொல்லி சீமான் வழக்கு தொடுத்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வாதாடினார்கள். அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல உச்ச நீதிமன்றத்தில் சீமானின் மேல் முறையீடு செய்தபோது, என் சார்பாக ஏன் யாரும் வாதாடவில்லை.

நான் சீமானிடம் பேசினால் காசுக்காக செய்கிறேன் என சொல்கிறீர்களே, நேற்று ஏன் என் சார்பாக யாரும் உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை. எனக்கு எந்த நீதியும், நியாமும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டேன். இதை தாண்டி நான் எந்த போராட்டமும் நான் பண்ணப்போவதில்லை. யாரும் சீமானுக்கு எதிராக பேசுவதில்லை. எனவே இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது. இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் பேசிய அவர், ‘இனிமேல் இது தொடர்பாக எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். இதை இத்தோடு விட்டுவிடுங்கள். எந்த புகார் கொடுத்தாலும், நடவடிக்கை இல்லை. இனிமேல் எந்த போராட்டமும் பண்ணிகிட்டு, புகார் கொடுத்துக்கொண்டு இருக்கப் போவதில்லை. எனவே இதுதான் எனது கடைசி வீடியோ. இதனை மக்களிடம் சொல்லிவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்

சீமான் - விஜயலட்சுமி விவகாரம் பின்னணி: தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி சீமான் ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, கடந்த பிப்​.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்​தார்.

மேலும் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்​கில் 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டுமென வளசர​வாக்​கம் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்டு சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்​தார். சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி சீமான் வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி போலீ​ஸார் கேட்ட பல்​வேறு கேள்வி​களுக்கு பதிலளித்​தார். இந்​நிலை​யில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சீமான் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கோபால் சங்​கர​நா​ராயணன், ‘‘மனு​தா​ர​ரான சீமானுக்கு எதி​ராக கடந்த 2011-ம் ஆண்டு அளிக்​கப்​பட்ட இந்த பாலியல் புகார் அரசி​யல் காரணங்​களுக்​காக மீண்​டும் தூசி தட்​டப்​பட்​டுள்​ளது. சீமானுக்கு எதி​ராக புகார் அளித்த அந்த நடிகையே 3 முறை வழக்கை திரும்​பப்​பெற்​றுள்​ளார். விஜயலட்​சுமி​யுடன் பழக்​கம் இருந்து பின்​னர் இரு​வரும் பிரிந்து விட்​டனர். சீமானுக்கு எதி​ரான புகாரை திரும்​பப் பெற்​றுக்​கொள்​வ​தாக அவரே கடித​மும் கொடுத்​துள்​ளார். தற்​போது சீமானை துன்​புறுத்​தும் நோக்​கில் பழைய புகாரின் பேரில் பதி​யப்​பட்ட வழக்​கில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை உயர் நீதி​மன்​ற​மும் உத்​தர​விட்​டுள்​ளது. இதனால் சீமானின் அரசி​யல் பொது​வாழ்​வுக்கு கடும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், ‘‘இத​னால் புகார் அளித்த அந்த பெண்​ணும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார் தானே. அதை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும். பாலியல்​ரீ​தி​யாக பாதிக்​கப்​பட்ட அந்த பெண்​ணுக்கு இழப்​பீடு எது​வும் வழங்​கப்​பட்​டுள்​ள​தா?’’ என்​றனர்.

அதற்கு சீமான் தரப்​பில், ‘‘விஜயலட்​சுமி​யுடன் தனிப்​பட்ட முறை​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உரிய இழப்​பீடு வழங்க முயற்​சிகள் மேற்​கொண்டு வரு​கிறோம்’’ என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், சீமானுக்கு எதி​ராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்​கின் விசா​ரணைக்கு இடைக்​கால தடை விதித்​தனர். அந்த வழக்​கில் விசா​ரணை மேற்​கொண்டு 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென்ற உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்​கும் தடை விதித்​ததோடு, இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​தனர். பின்​னர், விசா​ரணையை மே மாதத்​துக்கு தள்​ளி​வைத்​தனர். மேலும் இந்த இடைப்​பட்ட காலத்​தில் உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE