வழக்கை முடிக்க சீமான் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன? - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

By KU BUREAU

சென்னை: நடிகை விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி சீமான் ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, கடந்த பிப்​.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்​தார்.

மேலும் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்​கில் 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டுமென வளசர​வாக்​கம் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்டு சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்​தார். சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி சீமான் வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி போலீ​ஸார் கேட்ட பல்​வேறு கேள்வி​களுக்கு பதிலளித்​தார். இந்​நிலை​யில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சீமான் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கோபால் சங்​கர​நா​ராயணன், ‘‘மனு​தா​ர​ரான சீமானுக்கு எதி​ராக கடந்த 2011-ம் ஆண்டு அளிக்​கப்​பட்ட இந்த பாலியல் புகார் அரசி​யல் காரணங்​களுக்​காக மீண்​டும் தூசி தட்​டப்​பட்​டுள்​ளது. சீமானுக்கு எதி​ராக புகார் அளித்த அந்த நடிகையே 3 முறை வழக்கை திரும்​பப்​பெற்​றுள்​ளார். விஜயலட்​சுமி​யுடன் பழக்​கம் இருந்து பின்​னர் இரு​வரும் பிரிந்து விட்​டனர். சீமானுக்கு எதி​ரான புகாரை திரும்​பப் பெற்​றுக்​கொள்​வ​தாக அவரே கடித​மும் கொடுத்​துள்​ளார். தற்​போது சீமானை துன்​புறுத்​தும் நோக்​கில் பழைய புகாரின் பேரில் பதி​யப்​பட்ட வழக்​கில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை உயர் நீதி​மன்​ற​மும் உத்​தர​விட்​டுள்​ளது. இதனால் சீமானின் அரசி​யல் பொது​வாழ்​வுக்கு கடும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், ‘‘இத​னால் புகார் அளித்த அந்த பெண்​ணும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார் தானே. அதை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும். பாலியல்​ரீ​தி​யாக பாதிக்​கப்​பட்ட அந்த பெண்​ணுக்கு இழப்​பீடு எது​வும் வழங்​கப்​பட்​டுள்​ள​தா?’’ என்​றனர்.

அதற்கு சீமான் தரப்​பில், ‘‘விஜயலட்​சுமி​யுடன் தனிப்​பட்ட முறை​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உரிய இழப்​பீடு வழங்க முயற்​சிகள் மேற்​கொண்டு வரு​கிறோம்’’ என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், சீமானுக்கு எதி​ராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்​கின் விசா​ரணைக்கு இடைக்​கால தடை விதித்​தனர். அந்த வழக்​கில் விசா​ரணை மேற்​கொண்டு 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென்ற உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்​கும் தடை விதித்​ததோடு, இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​தனர். பின்​னர், விசா​ரணையை மே மாதத்​துக்கு தள்​ளி​வைத்​தனர். மேலும் இந்த இடைப்​பட்ட காலத்​தில் உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE