பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 4, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும்.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள்.
கன்னி: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும்.
துலாம்: பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகமாக உழைப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)