தஞ்சை: 2026-ம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கும்பகோணம் வட்டம் சாக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: டெல்டா பகுதி விவசாயிகள் வாழ்ந்தால் தான் தமிழகம் வாழ்ந்ததாக அர்த்தம். அனைத்து மொழியை கற்போம், அன்னை மொழியைக் காப்போம் என விஜயகாந்த் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அதனால், நம் தாய் மொழி தமிழ் உயிர் போன்றது. ஆனால், நாம் மற்ற மொழிகளை கற்கும் போது தான், தமிழகத்தில் இருந்து வெளியில் செல்லும்போது வேலை வாய்ப்பு கிடைக்கும், வருங்காலம் சிறக்கும்.
அவரவர்கள் எந்த மொழியைப் படித்தாலும் தப்பில்லை. இதில் நாங்கள் உறுதியாக இருப்போம். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாங்கள் உறுதியாக பங்கேற் போம். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை வஸ்துக்கள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது. இதை தடுக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முடிந்தப் பிறகு, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து, கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளோம். 2026-ம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனத் தெரிவித்தார்.
» சீமானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நடிகையின் பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
» கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி