அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: அரசு அலு​வல​கங்​களில் தமிழ் மொழியை பயன்​படுத்த வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓபிஎஸ் வலி​யுறுத்​தியுள்​ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்தில் பெரும்​பாலான அரசாணை​கள் ஆங்​கிலத்​திலேயே உள்​ளன. எடுத்​துக்​காட்​டாக, 2024-ம்ஆண்டு உள்​துறை மூலம் வெளி​யிடப்​பட்ட முக்​கிய​மான அரசாணை​களில் 80 அரசாணை​கள் ஆங்​கில மொழி​யிலும், ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழி​யிலும் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

சுகா​தா​ரத்​துறை​யில் ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழி​யிலும், 65 அரசாணை​கள் ஆங்​கிலத்​தி​லும் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. ஊரக வளர்ச்​சித் துறை​யில் 8 அரசாணை​கள் தமிழிலும், 67 அரசாணை​கள் ஆங்​கிலத்​தி​லும் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

அரசு பேருந்​துகளில் நடத்​துநர் மற்​றும் ஓட்​டுநர்​களுக்கு தமிழில் வழங்​கப்​பட்​டிருந்த பேருந்து குறிப்​பேடு தற்​போது ஆங்​கிலத்​தில் வழங்​கப்​பட்டு இருக்​கிறது. தமிழ் மொழியைகாக்க வேண்​டிய இடத்​தில் இருக்​கும் முதல்​வர் ஸ்டா​லின் தமிழ்​மொழி காக்​கும் முழக்​கத்தை முன்​னிறுத்​து​வோம் என்று கூறு​வது திமுக அரசின் நிர்​வாக திறமை​யின்​மைக்கு ஓர் எடுத்​துக்​காட்​டு.

எனவே, தமிழக அரசு அலு​வல​கங்​களில், பொதுத் துறை நிறு​வனங்​களில் முழு​வது​மாக தமிழ்மொழியைப் பயன்​படுத்​த​வும், பிற மாநிலங்​களில் தமிழ் மொழியை வளர்க்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE