உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தது யார்? - நிருபர் கேள்விக்கு திருமாவளவனின் ரியாக்‌ஷன்!

By KU BUREAU

திருச்சி: “உங்களை விலை கொடுத்து வாங்க முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்கள்?" என்று கேள்விக்கு, விசிக தலைவர் திருமாவளவன் பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து கடந்து சென்றார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.எஸ்.எஸ்., அஜெண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி. இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று ஹிந்தி. தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது அவர்கள் ஆதிக்கப் போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில மட்டும் அல்ல. இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலத்திலும் ஹிந்தி திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை நிலைப்பாடு. ஹிந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே் இந்தியாவின் ஒற்றை மொழி என மாற்றுவது என்ன செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர் என். ரவி போன்ற மாய்மால பேச்சுக்கு எல்லாம் இணங்க மாட்டார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் காய் நடத்த முடியாது என்ற நம்பிக்கையை ஊட்டுகிறோம்" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, “திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்கள்?" என்று கேள்விக்கு, சிரித்தபடியே கைக்கூப்பி வணக்கம் செலுத்தபடியே, பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து கடந்து சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE