மே 2026-ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

By KU BUREAU

சென்னை: ‘2026-ம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்​திருங்​கள். நன்றி கெட்​ட​வர்கள் தூக்கி எறியப்​படு​வார்​கள்’ என முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் கடுமையாக விமர்​சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: ஒரு விதை வளரு​கிறது என்று சொன்​னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்​னால் பலத்த சத்தம் இருக்​கும். சத்தம் எங்கு இருக்​கிறது என்பது எல்லோருக்​கும் தெரி​யும். அது அழிவுப் பாதையை நோக்​கிச் செல்​கிறது. அது ஒரு மூழ்​கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்​டார்​கள்.

அழிவிலிருந்து மீட்​டெடுக்க வேண்​டு​மானால், நன்றி மறந்த, துரோகத்​தின் மறுஉருவமாக விளங்​கும், ஆணவச் செருக்​குடைய, பொய்​மை​யின் மறுவடிவமாக திகழும் நயவஞ்​சகம் அகற்​றப்பட வேண்​டும்.

செய் நன்றி மறந்த பாவத்​திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. 2026-ம்​ஆண்டு மே மாதம்வரை பொறுத்​திருங்​கள். தமிழகப் பூமியை ஆளப் போவது யார் எனதெரி​யும். நன்றி கெட்​ட​வர்கள் தூக்கி எறியப்​படு​வார்​கள். துரோகம் நிச்​ச​யம் வீழும். நய​வஞ்​சகம் வெற்றி பெறாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE