சென்னை: ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2003ம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் ஓய்வூதியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்டு, கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் களத்தில் "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கப் படும்" என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க மூன்று உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அறிக்கை அளிக்க ஒன்பது மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்று, செயல்படுத்தும் கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
» மணப்பாறை பள்ளி பாலியல் கொடுமை; மற்ற மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு: ஜோதிமணி உறுதி