இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 14 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் நேற்று மாலை இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைந்து, 5 நாட்டுப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து, 14 பேரும் நாகைதுறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அந்த மீனவர்களுக்குச் சொந்தமான 5 நாட்டுப் படகுகளையும் பறிமுதல்செய்துள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில்இலங்கை மீனவர்கள், இந்தியகடல் எல்லைக்குள் மீன்பிடித்தது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

ஸ்பெஷல்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்