மத்திய பட்ஜெட்: இந்தியன் பம்ப் உற்பத்தியாளர் வரவேற்பு

By KU BUREAU

சென்னை: இந்தியன் பம்ப் உற்பத்​தி​யாளர்கள் சங்க (ஐபிஎம்ஏ) தலைவர் கே.வி. கார்த்திக் கூறி​யுள்ள​தாவது: மத்திய பட்ஜெட்​டில் வெளி​யாகி​யுள்ள பல்வேறு அறிவிப்புகள் உள்நாட்டு தொழில்​துறையை ஊக்கு​விக்​கும். அதிலும், குறிப்​பாக, பம்ப்உற்பத்​தி​யாளர்கள் இந்த அறிவிப்பு​களால் பெரிதும் பயனடை​யும் சூழல் உருவாகி​யுள்​ளது.

வேளாண், நீர் உள்கட்​டமைப்​புக்கு இந்த பட்ஜெட்​டில் அதிக முக்​கி​யத்துவம் கொடுக்​கப்​பட்​டுள்ள​தால் பம்புகள் விற்பனை கணிசமான அளவில் அதிகரிக்​கும். கிசான் கிரெடிட் கார்​டு​களுக்கான கடன் வரம்பு கூடு​தலாக ரூ.2 லட்சம் அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. இது, வேளாண் பம்பு​களுக்கான தேவையை சந்தை​யில் உடனடியாக அதிகரிக்​கும். இதன் மூலம், விவசா​யிகள் மட்டுமின்றி பம்ப் உற்பத்​தி​யாளர்​களுக்​கும் நல்ல பலன் கிடைக்​கும். இவ்​வாறு ​கார்​த்​திக்​ கூறி​யுள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE