போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு டிஏவுடன் ஓய்வூதியம்: வங்கிக் கணக்கில் வரவு!

By KU BUREAU

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும் போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை.

இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறைந்தபட்சமாக ரூ.1,300, அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய தொகை ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE