சென்னை: இஸ்ரோ Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் உடனடியாக வரையறை செய்யப்படும் எனும் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று 3-ஆவது காலநிலை மாநாட்டை (TN Climate Summit 3.0) முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார். தமிழ்நாடு சதுப்புநிலங்கள் இயக்கமும் (TN Wetlands Mission) இதில் ஒரு அங்கமாக உள்ளது.
தமிழ்நாடு மாநில சதுப்புநிலங்கள் ஆணையம் (TNSWA) அமைக்கப்பட்டு 6 ஆண்டுகள் 2 மாதங்கள் 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாட்டின் ஒரே ஒரு சதுப்புநிலத்தைக் கூட இன்னமும் அறிவிக்கை (notification) செய்யவில்லை. இந்நிலையில் பின்வரும் வாக்குறுதிகளை முதலமைச்சர் அளிக்க வேண்டும்.
1. 'இஸ்ரோ Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் (Complete ground truthing as well as demarcation of wetland boundaries)' எனும் உச்சநீதிமன்றத்தின் 11.12.2024 உத்தரவின் படி அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் உடனடியாக வரையறை செய்யப்படும்.
» அனைவரின் கல்விக் கடன்களையும் தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
» தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடு உயர்வு - சவரனுக்கு ரூ.840 எகிறியது!
2. தமிழகத்தின் அனைத்து சதுப்புநிலங்களும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (notification) செய்யப்படும்.
3. சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் (Wetland City Accreditation of the Ramsar Convention) இணைப்பதற்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும்.
என்கிற அறிவிப்புகளை TN Climate Summit 3.0 மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்