நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசுக்கு தாரை வார்ப்பதா? - தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

By KU BUREAU

சென்னை: தமிழகத்​தின் நெல் கொள்​முதல் உரிமையை மத்திய அரசுக்கு வழங்கக் கூடாது என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை: தமிழகத்​தில் காவிரி பாசன மாவட்​டங்கள் தவிர மீதமுள்ள மாவட்​டங்​களில் நெல் கொள்​முதல் செய்​யும் அதிகாரத்தை தேசிய நுகர்​வோர் கூட்டுறவு இணையத்​துக்கு தமிழக அரசு வழங்​கி​யுள்ளது அதிர்ச்சி அளிக்​கிறது. இது தமிழக விவசா​யிகளுக்கு திமுக அரசு இழைக்​கும் பெரும் துரோகம் ஆகும்.

மத்திய அரசு அறிவுறுத்​தி​ய​தால் தாரைவார்த்து விட்​டதாக தமிழக அரசு கூறுவதை எந்த வகையிலும் நியாயப்​படுத்த முடி​யாது. மத்திய அரசின் தேசிய நுகர்​வோர் இணையத்​தால் போதிய அளவு நெல் கொள்​முதல் செய்ய முடி​யா​விட்​டால் மீதமுள்ள நெல்லை விவசா​யிகள் தனியாருக்கு மிகக்​குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டி வரும். மத்திய அரசு கட்டாயப்​படுத்தி இருந்​தால், அடுத்​தக்​கட்ட நடவடிக்கை குறித்து அனைத்​துக் கட்சிக் கூட்​டத்​தைக் கூட்டி விவா​தித்​திருக்க வேண்​டும். அதை விடுத்து மாநில அரசின் உரிமை​களை​யும், விவசா​யிகளின் நலன்​களை​யும் மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது.

மாநில அரசுகளின் மூலம் நெல் கொள்​முதல் செய்​யப்​படும்​போது விவசா​யிகளுக்கு ஊக்கத்​தொகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்​ப​தால், அதை சிதைக்​கும் வகையில் மத்திய அரசு செயல்​படக் கூடாது. தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் சார்​பிலேயே நெல் கொள்​முதல் செய்ய மத்திய அரசு அனும​திக்க வேண்​டும். தவறும்​பட்​சத்​தில், தமிழக அரசே சொந்த நிதி​யில் நெல்லை கொள்​முதல் செய்ய வேண்​டும். இதற்காக வேளாண் ​விளைபொருள் ​கொள்​முதல் வாரியத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE