சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27-ம்தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25-ம் ஆண்டில் தமிழகத்துக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.மேலும், நபர் ஒருவருக்கு நாள்ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங் கவும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு ஏப்.25-ம்தேதி மத்திய அரசு ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீதம் நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1,229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333-ஐ பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் தொடர்பாக மத்தியஅரசு தெரிவித்துள்ளவழிகாட்டுதல்களை கண்டிப்பாகபின்பற்ற வேண்டும். மேலும் நிதிபயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
17 mins ago
ஸ்பெஷல்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
56 mins ago
ஸ்பெஷல்
2 hours ago
க்ரைம்
1 hour ago
ஸ்பெஷல்
2 hours ago
ஸ்பெஷல்
3 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago