‘அவதூறாக பேசுகிறார்’ - ஆர்.பி.உதயகுமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகாரளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக உரிமை மீட்புக் குழு விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் தெய்வம், மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் இன்று பிற்பகல் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது; "மதுரை கே.கே.நகரில் கடந்த 24ம் தேதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி, விஷமி என்று கூறி அவர் வீட்டை முற்றுகையிட்டு, அவர் தமிழகத்தில் நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தி விடுவோம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர் அவதூறாக பேசியுள்ள வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE