அதிமுக முக்கிய புள்ளியின் வீட்டில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு!

By KU BUREAU

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று, சென்னையில் 9 இடங்கள், தஞ்சாவூரில் 4 இடங்கள் என ஒரே நேரத்தில் 13 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE