எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் அரசு விழா - கனிமொழி, கீதாஜீவன் பங்கேற்பு

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் எட்டயபுரத்தில் இன்று நடந்தது.

இவ்விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கோட்டாட்சியர் க.மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் வரவேற்றார். மேலும், கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உமறுப்புலவர் நினைவிடத்தில் மலர்போர்வை வைத்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு துவா ஓதி மத நல்லிணக்க பிரார்த்தனை நடந்தது. விழாவில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் நவநீத கண்ணன், அன்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE