செங்கல்பட்டு: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

By கோ.கார்த்திக்

செங்கல்பட்டு: ஆலப்பாக்கம் கிராமத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ராஜா. இவருக்கு நித்யபிரியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பெற்று வந்து ராஜாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராஜாவின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதாக அவரது மனைவி மற்றும் பெற்றோர் தெரிவித்தனர். இதன்பேரில், மூளைச்சாவு ஏற்பட்ட ராஜாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், இதய வால்வு, கணையம் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டன. இதையடுத்து, நாளை நடைபெற உள்ள ராஜாவின் இறுதிச்சடங்கின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மரியாதை வழங்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE