ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல தடை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் சூறை காற்று காரணமாக மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகப்பட்சமாக 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துளளது.

இதனால் ராமநாதபுரம மாவட்ட மீனவர்கள் படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திடுமாறும், விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை இடைவெளி விட்டு நங்கூரம் இடுமாறும், இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கனும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE