குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நாயை கவ்விச் சென்ற சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: குன்னூர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் போதே வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை அடித்து இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குன்னூர் அருவங்காடு குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்றது.

ஆட்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் சிறுத்தை அச்சமின்றி வந்து நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் வந்து பொதுமக்களை மிரட்டிச் செல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE