புதுச்சேரிக்கு பேரிடர் மீட்புக் குழு வருகை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கனமழையைத் தொடர்ந்து புதுச்சேரிக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி, காரைக்காலில் அக்டோபர் 15, 16-ம் தேதிகளில் கனமழை பொழியும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், மழை பொழிவு புதுச்சேரியெங்கும் இன்றே இருந்தது. கனமழையால் ஏற்படும் பாதிப்புகளின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 30 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு சென்னையிலிருந்து இன்று மாலை புதுச்சேரிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

புதுச்சேரியில் உழவர்கரை நகராட்சிப் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரி கடற்கரைப் பகுதி, மழைநீர் தேங்கும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் கண்காணித்து தேவைப்படும் நிலையில், மீட்பு பணியை மேற்கொள்வர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE