தீபாவளி போனஸ்: கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக குடோனில் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி, கடலூர் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.

துணை செயலாளர் மோகன் ராஜ், நிர்வாகிகள் கருணாநிதி, பாரதி, பிரகாஷ், வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்புராயன், ஆளவந்தார், இணைச் செயலாளர் திருமுருகன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE