நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

By KU BUREAU

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை அக்டோபர் 15ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE